இடுகைகள்

ஏழு விதமான ஆச்சரியங்கள்

படம்
ஏழு விதமான ஆச்சரியங்கள்  1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன் கடமைகளைச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்...   2. ஒரு நாளில் உலகில் காணும் பொருள்கள் அனைத்தும் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், அந்த பொருள்களின் மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்...   3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்...   4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன்,அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...  5. நரகம் போன்ற வேதனைகளை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் மேலும் மேலும் பாவம், தவறுகளை செய்வது ஆச்சரியம்...   6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்...   7. சுவர்க்கம்* போன்ற மன நிறைவான வாழ்க்கையை பற்றி அறிந்த மனிதன், புண்ணியங்களை சேர்க்க மறந்து உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தன

சப்தகன்னியர்..!

படம்
சப்தகன்னியர் என்பவர் அம்பிகையின் ஏழு கன்னி வடிவத் தெய்வங்களாவர். இவர்கள் சப்த மாதாக்கள், ஏழு கன்னிமார்கள், கன்னி தெய்வங்கள், பெண் தெய்வங்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாக உள்ள கிராம பெண்தெய்வ வழிபாடாகும். சப்தகன்னியர் வழிபாடானது பழங்காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது என்பதனை கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்கள் மூலம் அறியலாம். காளிதாசர் தனது குமார சம்பவத்தில் சப்தகன்னியர்களை சிவபெருமானின் பணிபெண்டிர் என்று குறிப்பிடுகின்றார். சைவ சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானின் திருவுலாவின்போது விநாயகர் மற்றும் வீரபுத்திரரின் காவலோடு சப்தகன்னியர்கள் நடனமாடி செல்வதாக பாடல் பாடியுள்ளார். சப்தகன்னியர்கள் சிவலாயங்களில் தெற்குப்பகுதிகளிலும், கிராமங்களின் ஈசானப்பகுதிகளிலும், நீர்நிலைகளின் அருகிலும், மலையடிவாரங்களிலும், காட்டுப்பகுதிகளிலும் சிலைவடிவில் காணப்படுகின்றனர். இவர்கள் தனித்தனியாக சிலைவடிவிலும், ஒரே கல்லில் ஏழு உருவங்கள் செதுக்கப்பட்டு ஒரே சிலையாகவும், ஏழு தனித்தனி பீடங்களாகவும், ஒரே

மார்கழி மாதம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன... மார்கழியின் சிறப்புகள் என்ன?

படம்
  மார்கழி மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்குரிய அற்புதமான மாதமாக ஆன்மீகம் குறிப்பிடு கிறது . மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது. தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள  வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். மனி

இந்து மதம் என்றால் என்ன..?

படம்
இந்து மதம் பழமையான ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களில் ஒன்றாகும் - அதன் புனித எழுத்துக்கள் கி.மு. 1400 முதல் 1500 ஆண்டு காலக்கட்டத்திற்கு செல்லுகிறது. மில்லியன் கணக்கான தேவர்களைக் கொண்ட இது மிகவும் மாறுபட்ட மற்றும் சிக்கலான ஒரு மதமாகும். இந்துக்கள் பலவகையான அடிப்படை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் பல பிரிவுகளில் உள்ளனர். இது உலகின் மூன்றாவது பெரிய மதமாக இருந்தாலும், இந்து மதம் முதன்மையாக இந்தியாவிலும் நேபாளத்திலும் மட்டுமே உள்ளது. இந்து மதத்தின் முக்கிய நூல்களாக, வேதங்கள் (மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன), உபநிடதங்கள், மகாபாரதம் மற்றும் ராமாயணம். இந்த எழுத்துக்களில் பாடல்கள், மந்திரங்கள், தத்துவங்கள், சடங்குகள், கவிதைகள் மற்றும் கதைகள் உள்ளன, அவற்றிலிருந்துதான் இந்துக்கள் தங்கள் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இந்து மதத்தில் பயன்படுத்தப்படும் பிற நூல்களில் பிராமணர்கள், சூத்திரர்கள் மற்றும் ஆரண்யகர்கள் உள்ளனர். 330 மில்லியன் கடவுள்களை கொண்டுள்ளதாக கூறப்படும் இந்து மதம் பலதெய்வ நம்பிக்கை உள்ளதாக பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டாலும், அதற்கு ஒரு "கடவுள்" உன்னதமான-பிரம்

கோயில் வாயில் படிகட்டை மிதிக்கலாமா..?

படம்
கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?  • ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும்  • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் . • இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ... • பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்  • உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் .. • அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..  • இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் ...  • அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத

நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்

படம்
  இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே மிகவும் சிறப்பானது வேதங்கள். வேதங்கள் நான்கு என்பது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த வேதங்கள் தோன்றிய விதம், அவைகளின் தொன்மை, மற்றும் அவை உலகிற்கு வழங்கும் சாரம் ஆகியவற்றை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உலக சமய இலக்கியங்கள் அனைத்திடமிருந்தும் தனித்து நிற்பவை வேதங்கள். வேதங்கள் மனிதராலோ, கடவுளாலோ எழுதப்படாதவை என்று இந்து மரபுகள் சொல்கின்றன. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுள்ளது. இம்மொழி சமஸ்கிருத மொழியின் முன்னோடி ஆகும். வேதங்கள் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக வந்துள்ளன. இவை சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வேதங்கள் வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றைச் சுலோகங்களால் எடுத்துக் கூறபடுகின்றன.. வேதம் என்றால் அறிவு, ஞானம் எனப் பொருள்படும். மற்ற எல்லா யுகங்களிலும் வேதங்கள் ஒரே நூலாக இருந்தாலும், கலியுகத்தில் மட்டும் வேதங்கள் நான்கு பகுதிகளாக உள்ளன. அவை ரிக், யஜூர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்கள் ஆகும். வேதங்களை “மறை” என தமிழில் கூறுவர். இவை நான்மறை என்றும் கூறப்பட

இந்து மதம்

படம்
இந்து சமயப் பிரிவுகள் இந்து மதத்தில் நான்கு வேதங்கள், 108 உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், எண்ணற்ற மதக் கோட்பாடுகள், ஸ்தோத்திரங்கள், துணை நூல்கள், தெளிவுரை நூல்கள், நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. இந்து மதம் ஆறு பிரிவுகள் 1:- காணாபத்தியம் : விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம். 2:- சைவம் : ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவத்தை; தெய்வங்களின் தலைவனை, பெரியகடவுளாகிய மஹாதேவனை, சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம். சைவம் சிவனைமுழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவத்தின் காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பப்டது. யார் சைவர் எனப் போற்றப் படுபவராவார்? 1 திருநீறு அணிதல். 2 உருத்திராக்கம் அணிதல். 3 திருவைந்தெழுத்து மந்திரமாகிய நமசிவய எனும் மந்திரத்தை எப் பொழுதும் மனதில் இருத்தி தியானித்தல். 4 சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குதல். 5 தாய்

நவராத்திரி நாளில் அன்னை பராசக்தியின் 9 அவதாரங்கள்...!

படம்
நவராத்திரியின் சிறப்புகள் அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம். மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் "படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும் தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்" என்று பிரம்மா கூற. அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான். தேவர்களை வென்று விட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள் என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால் தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான்.  பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவ

நவ துர்க்கை அவதாரங்கள்

படம்
நவ துர்க்கை - வரலாறும் வழிபாடும் நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. 'நவ' என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. வட இந்தியாவில் நவராத்திரி தினங்களில் நவதுர்க்கைகளில் ஒவ்வொரு வரை ஒவ்வொரு நாளும் வழிபடுவது வழக்கமாக உள்ளது. நவ துர்க்கைகள் - துர்க்கை அவதாரங்கள்  1.சைலபுத்ரி 2.பிரம்மசாரிணி 3.சந்திர காண்டா 4.கூஷ்மாண்டா 5.ஸ்கந்த மாதா 6.காத்யாயனி 7.காளராத்திரி 8.மகாகௌரி 9.சித்திதாத்ரி 1.சைலபுத்ரி துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது 'மலைமகள்' என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் 'தாட்சாயினி' என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார். ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற

கொடியேற்ற மகத்துவம்

படம்
கொடியேற்ற தத்துவமும் வரலாறும் மனம், வாக்கு காயங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளி இருக்கும் இடங்களே ஆலயங்களாகும். பாலிலே நெய் போல் வெளிப்படாது நிற்கின்ற இறைவன் ஆலயங்களிலே தயிரிலே நெய் போல விளங்கி நிற்கின்றான். மனித உடம்பு போல ஆலய அமைப்பும் விளங்குகிறது. தெய்வத்தின் சாந்நித்தியத்துக்கு உரிய புனித இடம் ஆலயத்தில் கொடிக் கம்பத்திலிருந்து கர்ப்பக் கிருகம் வரை வியாபித்திருக்கிறது.   கொடி மரம் மூலாதாரமாகவும் பலிபீடம் சுவாதிட்டானமாகவும் பக்கத்திலே அமைந்துள்ள வாகனம் மணி பூரகமாகவும் அமைந்துள்ளது. இறைவனின் அருளை உயர்த்திக் காட்டிக்கொண்டிருப்பது போல் கொடிமரம் விளங்குகிறது. கொடி மரத்தை, துவஜஸ் தம்பம் என்று சொல்வர். இது கோவில் கோபுரத்தின் முக்காற் பங்கு உயரத்துக்கு அமைய வேண்டும் நிலத்துக்குள் ஐந்தில் ஒரு பாகம் ஸ்தாபனம் செய்யப் படவேண்டும். அடிப்பாகம் சதுரமாக அமைய வேண்டும். இது ஸ்தம்ப பீடம் என்று சொல்லப்படும். மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. உடலில் சுழு முனை நாடி செல்லும் வழியாகிய வீணைத் தண்டை கொடிமரம் குறிக்கிறது. 33

நாக கன்னியர் வழிபாடு

படம்
  நாக கன்னியர்கள்    பாம்பின் உடல் மிகவும் தூய்மையானது. வழுவழுப்பானது. சேறு சகதியில் புரண்டபோதிலும் அழுக்கு படிவதில்லை. கல்லிலும் முள்ளிலும், பயணிக்கும் போதும் துன்பமடைவதில்லை. அதனால் பாம்பு வடிவம் தூய்மையானதாகவும் துன்பமற்றதாகவும் கொள்ளப்படுகிறது. எனவே, தூய்மை மிகுந்த பெண்கள் நாக கன்னியர் என்று கூறப்படுகின்றனர். பூவுலகில் மானுடப் பிறவியில் தோன்றிய கன்னிப் பெண்கள் எதிர்பாராது மாண்டு போனால் மறுபிறப்பில் தூய்மை உடைய நாகமாகப் பிறப்பார்கள் என்றும், எஞ்சிய ஆயுளைப் பாம்பு வடிவில் கழிப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அவர்களே நாட்டுப்புற வழக்கில் நாக கன்னிகைகள் என்று போற்றப்படுகின்றனர். அவர்கள் அவ்வடிவில் இருந்தவாறே குலதெய்வமாக விளங்கி, மக்களுக்கு உதவிகளைச் செய்வார்கள் என்று நம்புகின்றனர். தாம் பிறந்த, வாழ்ந்த குடும்பத்தில் ஏற்படும் புத்திர தோஷம் திருமணத் தடை முதலியவற்றை நீக்கி நல்வாழ்வு அளிக்கின்றனர். இப்படி மானுட வடிவில் இருந்து மாண்டு நாக கன்னியராகப் பிறந்தவரும், நாகங்களின் வழியில் தோன்றிய நாக கன்னியரும் சிறப்புடன் சிவ  வழிபாடுகளை செய்து உய்கின்றனர். திருப்பனந்தாள், திருநெல்வேலி முதலிய தலங்கள

யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?

படம்
காசிப முனிவர்-கத்ரு தம்பதியரின் மகன்தான் இந்த ஆதிசேஷன். . சிவப்பெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரன் தான் இந்த ஆதிசேஷன். இதை மறுப்போரும் உண்டு. “கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை கண்டுப்பிடித்திருக்கின்றனர். இதற்கு, ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று பெயர். இந்த பாறை, பாம்பின் தோல்போல் வழவழப்பான மேற்பரப்பை கொண்டுள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள்சுருளாக இருப்பதாகவும்,இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதே கருத்தை ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் ஆமோதிக்கின்றனர். பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக உள்ள ஆதிசேசன் ஒன்றிற்கு மேற்பட்ட பல தலைகளை கொண்ட இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, அவரது ஒவ்வொரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, அவருக்கு இணையான அவதாரமெடுத்து வந்தவர். உதாரணமாக, விஷ்ணு இராமபிரானாக அவதரித்தபோது, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷ

ஸ்ரீ ராமரின் முன்னோர்கள்..!

படம்
  ரகு வம்சம் 1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா  19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா 31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2 32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான

ஆலய அமைப்பும் அறிவியலும்..!

படம்
  ஆலய அமைப்பு மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது.  உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன.  வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க பரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும

கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பது ஏன்..?

படம்
கருங்கல்லால் சிலை செய்வதற்கான காரணங்கள் ...! உலோகத்தால் செய்யப்படும் விக்கிரங்கங்களின் ஆற்றலை விட கருங்கல்லால் செய்யப்படும் விக்கிரங்கங்களின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது. கருங்கல்லில் நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை. நிலம் பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான் கல்லில் கூட செடி கொடிகள் வளர்கின்றன. நீர் கல்லில் நீர் உள்ளது. எனவே தான் கல் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம். எவ்வளவு வெயில் அடித்தாலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில் மண்டபங்களில் குளிர்ச்சியே நிலவும். இதை நீங்கள் கோவில்களில் கண்கூடாக காணலாம். காற்று கல்லில் காற்றும் உண்டு. எனவே தான் கல்லில் தேரை போன்ற உயிரினங்கள் கூட உயிர் வாழ்கிறது. நெருப்பு கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே அதுவே சான்று. ஆதிமனிதன் கற்களை உரசியே நெருப்பை உருவாக்கினான். ஆகாயம் ஆகாயத்தை

ஆடி மாதத்தில் வரும் விஷேசங்களும் அதன் சிறப்புகளும்

படம்
ஆடி மாதம் சிறப்புகள்  ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயணக் காலம் என்றும் தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயணக் காலம் என்றால் புண்ணிய காலம் ஆகும். சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். அந்த வகையில் நாளை முதல் ஆடி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதத்தின் சிறப்புகள்: ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது. அதன் காரணமாகதான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த