இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொடியேற்ற மகத்துவம்

படம்
கொடியேற்ற தத்துவமும் வரலாறும் மனம், வாக்கு காயங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளி இருக்கும் இடங்களே ஆலயங்களாகும். பாலிலே நெய் போல் வெளிப்படாது நிற்கின்ற இறைவன் ஆலயங்களிலே தயிரிலே நெய் போல விளங்கி நிற்கின்றான். மனித உடம்பு போல ஆலய அமைப்பும் விளங்குகிறது. தெய்வத்தின் சாந்நித்தியத்துக்கு உரிய புனித இடம் ஆலயத்தில் கொடிக் கம்பத்திலிருந்து கர்ப்பக் கிருகம் வரை வியாபித்திருக்கிறது.   கொடி மரம் மூலாதாரமாகவும் பலிபீடம் சுவாதிட்டானமாகவும் பக்கத்திலே அமைந்துள்ள வாகனம் மணி பூரகமாகவும் அமைந்துள்ளது. இறைவனின் அருளை உயர்த்திக் காட்டிக்கொண்டிருப்பது போல் கொடிமரம் விளங்குகிறது. கொடி மரத்தை, துவஜஸ் தம்பம் என்று சொல்வர். இது கோவில் கோபுரத்தின் முக்காற் பங்கு உயரத்துக்கு அமைய வேண்டும் நிலத்துக்குள் ஐந்தில் ஒரு பாகம் ஸ்தாபனம் செய்யப் படவேண்டும். அடிப்பாகம் சதுரமாக அமைய வேண்டும். இது ஸ்தம்ப பீடம் என்று சொல்லப்படும். மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. உடலில் சுழு முனை நாடி செல்லும் வழியாகிய வீணைத் தண்டை கொடிமரம் குறிக்கிறது....

நாக கன்னியர் வழிபாடு

படம்
  நாக கன்னியர்கள்    பாம்பின் உடல் மிகவும் தூய்மையானது. வழுவழுப்பானது. சேறு சகதியில் புரண்டபோதிலும் அழுக்கு படிவதில்லை. கல்லிலும் முள்ளிலும், பயணிக்கும் போதும் துன்பமடைவதில்லை. அதனால் பாம்பு வடிவம் தூய்மையானதாகவும் துன்பமற்றதாகவும் கொள்ளப்படுகிறது. எனவே, தூய்மை மிகுந்த பெண்கள் நாக கன்னியர் என்று கூறப்படுகின்றனர். பூவுலகில் மானுடப் பிறவியில் தோன்றிய கன்னிப் பெண்கள் எதிர்பாராது மாண்டு போனால் மறுபிறப்பில் தூய்மை உடைய நாகமாகப் பிறப்பார்கள் என்றும், எஞ்சிய ஆயுளைப் பாம்பு வடிவில் கழிப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அவர்களே நாட்டுப்புற வழக்கில் நாக கன்னிகைகள் என்று போற்றப்படுகின்றனர். அவர்கள் அவ்வடிவில் இருந்தவாறே குலதெய்வமாக விளங்கி, மக்களுக்கு உதவிகளைச் செய்வார்கள் என்று நம்புகின்றனர். தாம் பிறந்த, வாழ்ந்த குடும்பத்தில் ஏற்படும் புத்திர தோஷம் திருமணத் தடை முதலியவற்றை நீக்கி நல்வாழ்வு அளிக்கின்றனர். இப்படி மானுட வடிவில் இருந்து மாண்டு நாக கன்னியராகப் பிறந்தவரும், நாகங்களின் வழியில் தோன்றிய நாக கன்னியரும் சிறப்புடன் சிவ  வழிபாடுகளை செய்து உய்கின்றனர். திருப்பனந்தாள், திருநெல...

யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?

படம்
காசிப முனிவர்-கத்ரு தம்பதியரின் மகன்தான் இந்த ஆதிசேஷன். . சிவப்பெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரன் தான் இந்த ஆதிசேஷன். இதை மறுப்போரும் உண்டு. “கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை கண்டுப்பிடித்திருக்கின்றனர். இதற்கு, ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று பெயர். இந்த பாறை, பாம்பின் தோல்போல் வழவழப்பான மேற்பரப்பை கொண்டுள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள்சுருளாக இருப்பதாகவும்,இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதே கருத்தை ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் ஆமோதிக்கின்றனர். பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக உள்ள ஆதிசேசன் ஒன்றிற்கு மேற்பட்ட பல தலைகளை கொண்ட இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, அவரது ஒவ்வொரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, அவருக்கு இணையான அவதாரமெடுத்து வந்தவர். உதாரணமாக, விஷ்ணு இராமபிரானாக அவதரித்தபோது, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷ...

ஸ்ரீ ராமரின் முன்னோர்கள்..!

படம்
  ரகு வம்சம் 1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா  19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா 31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2 32. ஹர்யஷ்வாவின் மகன...

ஆலய அமைப்பும் அறிவியலும்..!

படம்
  ஆலய அமைப்பு மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது.  உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன.  வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க பரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது. இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமை...

கருங்கல்லில் தெய்வ சிலைகளை வடிப்பது ஏன்..?

படம்
கருங்கல்லால் சிலை செய்வதற்கான காரணங்கள் ...! உலோகத்தால் செய்யப்படும் விக்கிரங்கங்களின் ஆற்றலை விட கருங்கல்லால் செய்யப்படும் விக்கிரங்கங்களின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. கருங்கல் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது. கருங்கல்லில் நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை. நிலம் பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான் கல்லில் கூட செடி கொடிகள் வளர்கின்றன. நீர் கல்லில் நீர் உள்ளது. எனவே தான் கல் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீருற்று இருப்பதை காணலாம். எவ்வளவு வெயில் அடித்தாலும் கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில் மண்டபங்களில் குளிர்ச்சியே நிலவும். இதை நீங்கள் கோவில்களில் கண்கூடாக காணலாம். காற்று கல்லில் காற்றும் உண்டு. எனவே தான் கல்லில் தேரை போன்ற உயிரினங்கள் கூட உயிர் வாழ்கிறது. நெருப்பு கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே அதுவே சான்று. ஆதிமனிதன் கற்களை உரசியே நெருப்பை உருவாக்கினான். ஆகாயம் ஆகாயத்தை ...

ஆடி மாதத்தில் வரும் விஷேசங்களும் அதன் சிறப்புகளும்

படம்
ஆடி மாதம் சிறப்புகள்  ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயணக் காலம் என்றும் தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயணக் காலம் என்றால் புண்ணிய காலம் ஆகும். சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். அந்த வகையில் நாளை முதல் ஆடி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதத்தின் சிறப்புகள்: ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது. அதன் காரணமாகதான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உக...

ஆலய கும்பாபிஷேகம் என்றால் என்ன..? .

படம்
கும்பாபிஷேகம் என்பது என்ன..? அதன் சில விளக்கங்கள். கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கமும் கும்பாபிஷேகத்தின் வகைகளும். 1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது. 2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது. 3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது. 4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி. கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம். 1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு...

ஆலய வழிபாடு – ஒரு பார்வை

படம்
நாம் அன்றாடம் இறைவனை மனதிலும் இல்லங்களிலும் வணங்கி வந்தாலும் ஆலய வழிபாடு என்பது அவசியமானது ஆகும்.  ஆலய வழிபாட்டுக்கு செல்பவர்கள் குளித்து தூய்மையான ஆடை உடுத்தி திருநீறு,  திருமண் என அவரவருக்கு ஏற்றவாறு உள்ளவற்றை அணிந்து ஆலயம் செல்ல வேண்டும். திருகோவிலினை அடைந்தவுடன் கோவிலின் முன்பு அமைந்துள்ள திருகுளத்தில் (தெப்பத்தில்) கைகால்களை கழுவிக் கொள்ள வேண்டும். ஆலய கோபுரத்தின் முன் நின்று இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து அண்ணாந்து நோக்கி கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.  கோபுரத்தை தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் நினைத்து வணங்கி வழிபட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும். கோபுர தரிசனத்திற்கான காரணம்..? ஆலயங்களில் கோபுரத்துக்கு எதிரில் நாம் நிற்கும்போது இறைவனான பரம்பொருள் எங்கும் நிறைந்து காணும்படியாக இருக்கிறார். அவருக்கு எதிரில் நாம் மிகவும் சிறியவர்கள் என்ற அடக்க உணர்வு ஏற்படும். மனத்தில் அகங்காரம் அழிந்து பணிவு தோன்றும். எனவே கோபுரத்தை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். மேலும் கோபுர உச்சியில் அமைக்கப்பட்டுள்ள செம்பு கலசங்கள் இடி, மின்னல் ஆகியவை தாக்கும் போது அதனை ஈர்த்து ப...