இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்து மதம்

படம்
இந்து சமயப் பிரிவுகள் இந்து மதத்தில் நான்கு வேதங்கள், 108 உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், எண்ணற்ற மதக் கோட்பாடுகள், ஸ்தோத்திரங்கள், துணை நூல்கள், தெளிவுரை நூல்கள், நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. இந்து மதம் ஆறு பிரிவுகள் 1:- காணாபத்தியம் : விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு. எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம். 2:- சைவம் : ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியான சிவத்தை; தெய்வங்களின் தலைவனை, பெரியகடவுளாகிய மஹாதேவனை, சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம். சைவம் சிவனைமுழுமுதலாகக் கொண்ட சமயமாகும். சிவ வழிபாடானது, பண்டுதொட்டே இந்திய உபகண்டத்தில் நிலவிவந்திருக்கிறது. சைவத்தின் காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பப்டது. யார் சைவர் எனப் போற்றப் படுபவராவார்? 1 திருநீறு அணிதல். 2 உருத்திராக்கம் அணிதல். 3 திருவைந்தெழுத்து மந்திரமாகிய நமசிவய எனும் மந்திரத்தை எப் பொழுதும் மனதில் இருத்தி தியானித்தல். 4 சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குதல். 5 தாய்...

நவராத்திரி நாளில் அன்னை பராசக்தியின் 9 அவதாரங்கள்...!

படம்
நவராத்திரியின் சிறப்புகள் அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம். மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் "படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும் தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்" என்று பிரம்மா கூற. அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான். தேவர்களை வென்று விட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள் என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால் தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான்.  பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவ...

நவ துர்க்கை அவதாரங்கள்

படம்
நவ துர்க்கை - வரலாறும் வழிபாடும் நவதுர்க்கை என்றால் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் என கூறப்படுகின்றது. 'நவ' என்றால் ஒன்பது என்பது பொருள். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. வட இந்தியாவில் நவராத்திரி தினங்களில் நவதுர்க்கைகளில் ஒவ்வொரு வரை ஒவ்வொரு நாளும் வழிபடுவது வழக்கமாக உள்ளது. நவ துர்க்கைகள் - துர்க்கை அவதாரங்கள்  1.சைலபுத்ரி 2.பிரம்மசாரிணி 3.சந்திர காண்டா 4.கூஷ்மாண்டா 5.ஸ்கந்த மாதா 6.காத்யாயனி 7.காளராத்திரி 8.மகாகௌரி 9.சித்திதாத்ரி 1.சைலபுத்ரி துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது 'மலைமகள்' என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன. இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் 'தாட்சாயினி' என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார். ஒன்பது சக்கரங்களில் முதல் சக்கரமாக, மூலாதாரமாக விளங்குகின்றார். இவரின் வாகனம் நந்தியாகவும், ஆயுதம் சூலத்தையும் ஏந்தி நிற...